search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை தலைமை தபால் நிலையம்"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 14-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர், ஜூன்.4-

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 14-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அரசு, ஸ்ரீதரன், கருப்புசாமி, முனியகுமரன், தசரதன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரையை 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 14-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தினால் கிராமப் புறங்களில் அஞ்சல் சேவை பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் முதியோர் உதவி தொகை, விதவைகளுக்கான உதவி தொகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ×